Thursday, April 7, 2011

கடிதம்

மழை பெண்ணே !
நான் உன் தலை கோத
நினைக்கும்
நேரமெல்லாம்
என் தலை நனைத்து
போகிறாய்...

நான் உன்
வாசம்
நுகர நினைக்கும்
போதெல்லாம்
என் நாசிகளில்
நுழைகிறாய்...

உன் ஸ்பரிசம்
வேண்டும்
போதெல்லாம்
உன் மார்பினில்
அணைக்கிறாய்...

வார்த்திருக்கிறேன்
என் காதலை
உன்
முக வார்ப்படமாய் ....

துயருறும்
போதினில்
என்னுயிராய்
நிறைகிறாய்...

எச்சில் சுவாசமும்
நெஞ்சில் நேசமுமாய்
உனை
அழைக்கிறேன்....

இன்றில்லை எனினும்
என்றாவது
ஒருநாள்
என் சுவாசம்
உனை நிறைக்கும் ...
உன்னிலிருந்து
உன் சுவாசம்
விலகும் போது..

நம்பிக்கையுடனும்
காதலுடனும்
உன்
செல்லகுட்டி.

No comments:

Post a Comment