இதுவும்..
நிச்சயமில்லாத
வாழ்க்கையின்
நிதர்சனங்களை
தேடி அலைந்து
கொண்டிருக்கிறேன் ...
மரத்த மனதோடும் ...
வறண்ட வார்த்தைகளோடும்.
Monday, August 1, 2011
Sunday, June 19, 2011
Thursday, April 7, 2011
கடிதம்
மழை பெண்ணே !
நான் உன் தலை கோத
நினைக்கும்
நேரமெல்லாம்
என் தலை நனைத்து
போகிறாய்...
நான் உன்
வாசம்
நுகர நினைக்கும்
போதெல்லாம்
என் நாசிகளில்
நுழைகிறாய்...
உன் ஸ்பரிசம்
வேண்டும்
போதெல்லாம்
உன் மார்பினில்
அணைக்கிறாய்...
வார்த்திருக்கிறேன்
என் காதலை
உன்
முக வார்ப்படமாய் ....
துயருறும்
போதினில்
என்னுயிராய்
நிறைகிறாய்...
எச்சில் சுவாசமும்
நெஞ்சில் நேசமுமாய்
உனை
அழைக்கிறேன்....
இன்றில்லை எனினும்
என்றாவது
ஒருநாள்
என் சுவாசம்
உனை நிறைக்கும் ...
உன்னிலிருந்து
உன் சுவாசம்
விலகும் போது..
நம்பிக்கையுடனும்
காதலுடனும்
உன்
செல்லகுட்டி.
மழை பெண்ணே !
நான் உன் தலை கோத
நினைக்கும்
நேரமெல்லாம்
என் தலை நனைத்து
போகிறாய்...
நான் உன்
வாசம்
நுகர நினைக்கும்
போதெல்லாம்
என் நாசிகளில்
நுழைகிறாய்...
உன் ஸ்பரிசம்
வேண்டும்
போதெல்லாம்
உன் மார்பினில்
அணைக்கிறாய்...
வார்த்திருக்கிறேன்
என் காதலை
உன்
முக வார்ப்படமாய் ....
துயருறும்
போதினில்
என்னுயிராய்
நிறைகிறாய்...
எச்சில் சுவாசமும்
நெஞ்சில் நேசமுமாய்
உனை
அழைக்கிறேன்....
இன்றில்லை எனினும்
என்றாவது
ஒருநாள்
என் சுவாசம்
உனை நிறைக்கும் ...
உன்னிலிருந்து
உன் சுவாசம்
விலகும் போது..
நம்பிக்கையுடனும்
காதலுடனும்
உன்
செல்லகுட்டி.
Wednesday, April 6, 2011
கடிதம்
உன் நினைவுகள் நெருக்கியடித்த அந்த நெருஞ்சி முள் தருணங்களிலும்
உன் நினைவோடு ஒன்றியிருக்க
முயற்சி செய்கிறேன்
கிளை காதலாய் நின்று விடாமல்
என்னுள்
துளைத்து சென்ற துப்பாக்கி தோட்டவாகி விட்டாய்
ரணம் உன்னுடயதாக்கி
வலியையும் வேதனையையும்
என்னுடயதாக்கி விட்டாய்
ஆழ பரவும் ஆல விருட்சமாக்கி விட்டு
பாதியில் பிடுங்கி எறிய சொல்கிறாய்
வேடமணிந்த மனிதர்கள் மத்தியில்
என் வேடம் களைய செய்தாய்
தோழியுடன் கதைத்த
கடைசி தருணங்களிலும்
உன்னை பற்றிய வார்த்தைகளே
மிகுதியாக விழுந்தன
இறுதியாக அவள் கதைத்த வார்த்தைகளே
இறுதியாகி விடுமோ என
வினவுகிறேன்
கருந்தேளின் கடும்விஷம்
தீண்டியதை போல
உணர்வெனக்கு....
நான் உனக்கு வினவும்
வினா ஒன்றே !!
இயலாமை ஈன்றெடுத்த
இறுதி குழந்தையா நீ ..
உனக்கான கனவுகளை உன்னுள்ளே
புதைத்து
சாகாவரம் பெற்ற கல்லறையாக போகின்றாயா.!
முடிவொன்று சொல்கிறேன் என்று
முற்று புள்ளியை காற்புள்ளியாக்கி
தொடர செய போகிறாயா அல்லது
முழுபுள்ளியிட்டு
முடிவொன்று தர போகிறாயா .!
எதுவாகினும் கதைத்து விடு
காத்திருக்கிறேன் .......
பின்பனிவிழும் மார்கழி மாத இரவில்
உன்னுடன் கதைத்ததெல்லாம்
கதையென எண்ணவில்லை
சாரல் மழை விழும் நவம்பர்
மாத சாலையில் நடந்து சென்றதெல்லாம்
நனவாக வேண்டுமென்றே
விரும்புகிறேன் .!!
என் காதல் காவியமா
அல்ல வழக்கம்போல
காகிதமோ. !
வினாவிற்கு விடைஎழுதி
காத்து இருக்கிறேன்
இலக்கணப்பிழை கண்டுபிடிக்கும்
தமிழாசிரியர் போல
என் மடலை நீ வாசிக்க
நேர்ந்தால் பிழை எனது..
பிழை இருந்தால்
பொருத்தருள்க
பிடிக்குமென்றால்
வரம் அருள்க .
Thursday, March 31, 2011
காலம்
உன்னுடன் கைகோர்த்து
நடந்த நினைவுகள்
இலையுதிர்காலங்களில்...
உன் வெப்பசுவாசமும்
ஆதரவான அணைப்பும்
பனியுதிர்காலங்களில்...
உன் கடுங்கோபமும்
கண்ணீர் தாரைகளும்
மழையுதிர்காலங்களில்...
பருவங்கள் மாறுகின்றன
நினைவுகள்
மாற மாறுகின்றன..
நினைவுதிர் காலம்
தேடுகின்றேன்,
உயிருதிரும் போதுதான்
என புரிகிறேன் இப்போது !!!!
உன்னுடன் கைகோர்த்து
நடந்த நினைவுகள்
இலையுதிர்காலங்களில்...
உன் வெப்பசுவாசமும்
ஆதரவான அணைப்பும்
பனியுதிர்காலங்களில்...
உன் கடுங்கோபமும்
கண்ணீர் தாரைகளும்
மழையுதிர்காலங்களில்...
பருவங்கள் மாறுகின்றன
நினைவுகள்
மாற மாறுகின்றன..
நினைவுதிர் காலம்
தேடுகின்றேன்,
உயிருதிரும் போதுதான்
என புரிகிறேன் இப்போது !!!!
Monday, March 28, 2011
காதலிக்கிறேன்
ஆரவாரித்து செல்லும்
பெரும் கூட்டத்தினோடு
சென்றுகொண்டிருக்கிறேன்
தன்னந்தனியாக,
நீயில்லாத பொழுதுகளில்...
தனிமையும் ஆர்ப்பரித்து
பெரும்கூட்டமாகிறது
உன்னுடன் செல்கையில்...
உன்னை காதலிக்கிறேன்
உயிராய் காதலிக்கிறேன்
உன் நினைவுகளை பற்றி
காதலிக்கிறேன்,
உன் காதலை பற்றி
காதலிக்கிறேன்,
எப்போதும் உனை
பற்றி இருக்கவே
இன்னும் இறுக்கமாய்
உன்னை காதலிக்கிறேன்.!!!
ஆரவாரித்து செல்லும்
பெரும் கூட்டத்தினோடு
சென்றுகொண்டிருக்கிறேன்
தன்னந்தனியாக,
நீயில்லாத பொழுதுகளில்...
தனிமையும் ஆர்ப்பரித்து
பெரும்கூட்டமாகிறது
உன்னுடன் செல்கையில்...
உன்னை காதலிக்கிறேன்
உயிராய் காதலிக்கிறேன்
உன் நினைவுகளை பற்றி
காதலிக்கிறேன்,
உன் காதலை பற்றி
காதலிக்கிறேன்,
எப்போதும் உனை
பற்றி இருக்கவே
இன்னும் இறுக்கமாய்
உன்னை காதலிக்கிறேன்.!!!
கூடி
காத்திருப்பது
மட்டும்
காதல் அல்லவே..
இருந்து காப்பதும்
கூடத்தான்...
கூடவே
கூடி இருந்தேன்..
உனை கூடவே
தேடி அலைந்தேன்..
கூடலே முடிவெனினும்,
கூடவே
துவங்கி இருக்கிறேன்..
உனை கூடி,
உனை சூடி,
உனை பாடி,
என்னிரு கரங்களிலும்
புன்னகைஏந்திய
உன் பொன்முகம்
தாங்கி..
இருளுடன் கழித்த
என் பகல்களை,
உன் விழிக்கீற்றினில்
திறக்க காத்திருக்கிறேன்.!!!
காத்திருப்பது
மட்டும்
காதல் அல்லவே..
இருந்து காப்பதும்
கூடத்தான்...
கூடவே
கூடி இருந்தேன்..
உனை கூடவே
தேடி அலைந்தேன்..
கூடலே முடிவெனினும்,
கூடவே
துவங்கி இருக்கிறேன்..
உனை கூடி,
உனை சூடி,
உனை பாடி,
என்னிரு கரங்களிலும்
புன்னகைஏந்திய
உன் பொன்முகம்
தாங்கி..
இருளுடன் கழித்த
என் பகல்களை,
உன் விழிக்கீற்றினில்
திறக்க காத்திருக்கிறேன்.!!!
தேவதையின் காதலில்..
என் மார்பில் நீ
சாய்ந்திருந்த
நிமிடங்கள் அனைத்திலும்
என்
தேவதையாகவே
என்னோடு
இருந்திருக்கிறாய் ...
உன் மடியில் நான்
சாய்ந்திருந்த
கணங்கள் அனைத்திலும்
என்
தேவதையாகவே
என்னை
அணைத்திருக்கிறாய்...
நான் உன்
நியாபக மறதி
அல்ல ...
உன் நியாபக
தீ......
எரிந்தும் எரியாமல்
இருக்கிறேன்
உன் காதலில்...
நீ என்னை
எறிந்தும்,
எரியாமல்
இருக்கிறேன் உன் காதலில்.!!!!
என் மார்பில் நீ
சாய்ந்திருந்த
நிமிடங்கள் அனைத்திலும்
என்
தேவதையாகவே
என்னோடு
இருந்திருக்கிறாய் ...
உன் மடியில் நான்
சாய்ந்திருந்த
கணங்கள் அனைத்திலும்
என்
தேவதையாகவே
என்னை
அணைத்திருக்கிறாய்...
நான் உன்
நியாபக மறதி
அல்ல ...
உன் நியாபக
தீ......
எரிந்தும் எரியாமல்
இருக்கிறேன்
உன் காதலில்...
நீ என்னை
எறிந்தும்,
எரியாமல்
இருக்கிறேன் உன் காதலில்.!!!!
Friday, March 25, 2011
வா...
அகன்று விரிந்து பரந்த
உன் கண்களில் தெரிகின்றதடி
உன் அவா..
தடுப்பதெது???
தடைகளை உடைத்து வா...
சாதிக்க பிறந்தவள் நீ...
திமிறி எழுந்து வா...
திரைகளை விலக்கி வா...
பீடு நடை போட்டு வா...
எனை வெல்ல யாருமில்லை
என்ற திமிரோடு வா..
அகந்தையோடு வா...
ஆரவாரித்து வா...
இளைப்பாறாமல் இறுமாப்புடன் வா...
ஈன்றுவந்து வா...
உனைவெல்ல யாருமில்லையென வா...
ஊழி பெருவெள்ளமென வா...
எழுச்சியோடு வா...
ஏறுநடை போட்டு வா...
ஐயமின்றி அச்சமின்றி வா...
ஒற்றை தழலுடன் வா...
ஓங்கி எறிய விட்டு வா...
ஒளடதம் பற்றி வா....!!!
இந்த உலகை வென்றுவிட
வா...
உன் காலடியில் இட்டு
மிதித்து விட வா...!!!
வந்து விடு வா...!!!
அகன்று விரிந்து பரந்த
உன் கண்களில் தெரிகின்றதடி
உன் அவா..
தடுப்பதெது???
தடைகளை உடைத்து வா...
சாதிக்க பிறந்தவள் நீ...
திமிறி எழுந்து வா...
திரைகளை விலக்கி வா...
பீடு நடை போட்டு வா...
எனை வெல்ல யாருமில்லை
என்ற திமிரோடு வா..
அகந்தையோடு வா...
ஆரவாரித்து வா...
இளைப்பாறாமல் இறுமாப்புடன் வா...
ஈன்றுவந்து வா...
உனைவெல்ல யாருமில்லையென வா...
ஊழி பெருவெள்ளமென வா...
எழுச்சியோடு வா...
ஏறுநடை போட்டு வா...
ஐயமின்றி அச்சமின்றி வா...
ஒற்றை தழலுடன் வா...
ஓங்கி எறிய விட்டு வா...
ஒளடதம் பற்றி வா....!!!
இந்த உலகை வென்றுவிட
வா...
உன் காலடியில் இட்டு
மிதித்து விட வா...!!!
வந்து விடு வா...!!!
சிறகடித்து ..
இடைவெளி இல்லாமல்
வந்து விழும் உன்
வார்த்தைகளும் வாக்கியங்களும்
எப்போதும் சலிப்பதேயில்லை
எனக்கு..
நொடிகள் நிமிடங்களாகும்
ஆனால் மணிகள்
நொடிகளாகின்றன
உன்னுடன் கதைத்திருக்கும்போது ...
உன்னுடன் கதைத்தபோது
எஞ்சிய
உன் வார்த்தைகள்
தேவதைகள் ஆகின்றன
நீயில்லாத பொழுதுகளில்...
சின்ன சின்ன சண்டைகள்,
செல்ல கடிகள்,
மூர்க்க முத்தங்கள் ..
வியர்க்கும் பொழுதும்
கை அலம்பிய பிறகும்
துடைத்து விடும் ஆதுரமான
உன் கையுடன் சேர்ந்த
துப்பட்டா...
இப்படி நீயில்லா
தருணங்களிலும்
எனை நிறைத்தபடி நீ...
உன்
முறிந்த சிறகாகவேனும்
எனக்கு அனுமதி கொடு..
உனை பற்றி
நீ பறந்து செல்ல..
அடைய இருக்கும்
சிகரங்களை விட்டு
அலைந்த
நெடும்தரையை சுற்றியே
வருகிறாய்..
சிறிதேனும் பறக்க
முயற்சி செய் உன்
வேலிகளை விலக்கி
நீ அடையபோகும் உயரங்களுக்காக.!!!
இடைவெளி இல்லாமல்
வந்து விழும் உன்
வார்த்தைகளும் வாக்கியங்களும்
எப்போதும் சலிப்பதேயில்லை
எனக்கு..
நொடிகள் நிமிடங்களாகும்
ஆனால் மணிகள்
நொடிகளாகின்றன
உன்னுடன் கதைத்திருக்கும்போது ...
உன்னுடன் கதைத்தபோது
எஞ்சிய
உன் வார்த்தைகள்
தேவதைகள் ஆகின்றன
நீயில்லாத பொழுதுகளில்...
சின்ன சின்ன சண்டைகள்,
செல்ல கடிகள்,
மூர்க்க முத்தங்கள் ..
வியர்க்கும் பொழுதும்
கை அலம்பிய பிறகும்
துடைத்து விடும் ஆதுரமான
உன் கையுடன் சேர்ந்த
துப்பட்டா...
இப்படி நீயில்லா
தருணங்களிலும்
எனை நிறைத்தபடி நீ...
உன்
முறிந்த சிறகாகவேனும்
எனக்கு அனுமதி கொடு..
உனை பற்றி
நீ பறந்து செல்ல..
அடைய இருக்கும்
சிகரங்களை விட்டு
அலைந்த
நெடும்தரையை சுற்றியே
வருகிறாய்..
சிறிதேனும் பறக்க
முயற்சி செய் உன்
வேலிகளை விலக்கி
நீ அடையபோகும் உயரங்களுக்காக.!!!
என் குட்டி தேவதை பெண்ணே ...
உன்னை பற்றிய நினைவுகளை
மட்டும்
என்னுள் விதைத்து விட்டு
சென்று விட்டாய்..
ஆனால் எனக்கு தெரியாமலே
அவை
விருட்சமாகி விழுதுகள்
விட்டிருக்கின்றது..
எனக்கு மட்டுமே
சொந்தம் என்று உரிமையோ
சொந்தமோ கொண்டாடும் அளவிற்கு
என்னிடம் இதுவரை எதுவுமில்லை
என்றே நினைத்திருந்தேன் ..
ஆனால் இப்போது
ஒன்றிருக்கிறது
என்று உணர்கிறேன் ..
நீ எனக்கு மட்டுமே
சொந்தமானவள் ..
உரிமையானவள்...
காத்து கிடப்பது
உனக்காக மட்டும் என்பதை
மறந்து விடாதே..
நான் தவம் செய
போகின்றேன்..
காத்திருத்தல் எனும் தவம் ..
எதை கொடுக்க போகிறாயடி !!
வரமா !!?
சாபமா !!?
எதை தருபினும் ஏற்று கொள்வேன் ..
வரமெனின்
வாழ்வோம் இணைபிரியாது..
இல்லையெனின்
வாழ்வேன்
உன் நினைவுகளுடன் பிரியாது .!!
உன்னை பற்றிய நினைவுகளை
மட்டும்
என்னுள் விதைத்து விட்டு
சென்று விட்டாய்..
ஆனால் எனக்கு தெரியாமலே
அவை
விருட்சமாகி விழுதுகள்
விட்டிருக்கின்றது..
எனக்கு மட்டுமே
சொந்தம் என்று உரிமையோ
சொந்தமோ கொண்டாடும் அளவிற்கு
என்னிடம் இதுவரை எதுவுமில்லை
என்றே நினைத்திருந்தேன் ..
ஆனால் இப்போது
ஒன்றிருக்கிறது
என்று உணர்கிறேன் ..
நீ எனக்கு மட்டுமே
சொந்தமானவள் ..
உரிமையானவள்...
காத்து கிடப்பது
உனக்காக மட்டும் என்பதை
மறந்து விடாதே..
நான் தவம் செய
போகின்றேன்..
காத்திருத்தல் எனும் தவம் ..
எதை கொடுக்க போகிறாயடி !!
வரமா !!?
சாபமா !!?
எதை தருபினும் ஏற்று கொள்வேன் ..
வரமெனின்
வாழ்வோம் இணைபிரியாது..
இல்லையெனின்
வாழ்வேன்
உன் நினைவுகளுடன் பிரியாது .!!
காத்திருக்கிறேன்
என் வானவில் நீ ..
கலவையான
உன் உணர்வுகளை
என்னிடமே கொட்டுவதால்
என் வானவில் நீ...
என் தேவதை நீ ..
எனக்கான உணர்வுகளை
ஆட்கொண்டு
ஆரவாரிக்கும்
என் தேவதை நீ...
என் அலைகடல் நீ..
பொங்கி எழுந்து
ஆர்ப்பரிக்கும்
உன் வார்த்தை அலைகளில்
என்னை மூழ்கடிக்கும்
என் ஆழ அலைகடல் நீ...
காதலித்து காத்திருக்கிறேன்
உன் வண்ணங்களுக்காக
அது கருமைஎனினும்
அதில் கரைந்து விட..
காதலித்து காத்திருக்கிறேன்
உன் வரங்களுக்காக ..
காத்திருப்பே வரம் எனினும்
என் தேவதைக்கான
இன்னுமோர் தவம் செய ...
காதலித்து காத்திருக்கிறேன்
உன் வார்த்தை பேரலைகளில்
நான் மூழ்கி விட...
காத்திருக்கிறேனடி
உனை காதலித்து !!!!
என் வானவில் நீ ..
கலவையான
உன் உணர்வுகளை
என்னிடமே கொட்டுவதால்
என் வானவில் நீ...
என் தேவதை நீ ..
எனக்கான உணர்வுகளை
ஆட்கொண்டு
ஆரவாரிக்கும்
என் தேவதை நீ...
என் அலைகடல் நீ..
பொங்கி எழுந்து
ஆர்ப்பரிக்கும்
உன் வார்த்தை அலைகளில்
என்னை மூழ்கடிக்கும்
என் ஆழ அலைகடல் நீ...
காதலித்து காத்திருக்கிறேன்
உன் வண்ணங்களுக்காக
அது கருமைஎனினும்
அதில் கரைந்து விட..
காதலித்து காத்திருக்கிறேன்
உன் வரங்களுக்காக ..
காத்திருப்பே வரம் எனினும்
என் தேவதைக்கான
இன்னுமோர் தவம் செய ...
காதலித்து காத்திருக்கிறேன்
உன் வார்த்தை பேரலைகளில்
நான் மூழ்கி விட...
காத்திருக்கிறேனடி
உனை காதலித்து !!!!
Subscribe to:
Posts (Atom)