Monday, March 28, 2011

உயிர் துளி

எனக்கான
மிகச்சிறந்த
நிமிடங்களை
வாழ்ந்து விட்டேன்
உன்னுடன்...

எனக்கான
தேவ நொடிகளை
பெற்று கொண்டேன்
உன்னிடம்...

என்னுயிர் துளியாக
பெற்று கொண்டேன்
எச்சிலுடன்
முத்தங்களையும்
உன்னிடம்.....

எவ்வளவோ
உன்னிடம் பெற்றும்,
திருப்பி உனக்களிக்க
ஏதுமில்லை என்னிடம்
என் காதலை தவிர.!!!


No comments:

Post a Comment