தேங்கி ...
எல்லைகள் அற்ற
காதல் வெளியில்
திரிந்து கொண்டிருக்கிறேன்
தீராத உன்
வாசங்களோடும்
விலகா உன்
சுவாசங்களோடும்......
உறங்க உன் மடி
கேட்கின்றது மனது
உன் ஸ்பரிசம் வேண்டுகின்றன
விரல்கள்..
ஏங்கி தேங்கித்தான்
போயிருக்கிறேன்
அடங்காத காதலோடு !!!
காதல்காதலின் பெருவெளியில் அன்பு பூக்களை தூவி வைத்து காத்து கொண்டிருக்கிறேன்உன் வருகைக்காக......விழி மூடாமல் இமைக்க மறந்து .....இரக்கபட்டு வந்து விடாதே .!!!காதலுடன் வா .!!!
உளறல்பைத்தியகாரனின் பிதற்றல் எனவும் பிச்சைக்காரனின் யாசகம் எனவும் உனக்கு தோன்றலாம்...என் பிதற்றலும் யாசகமும் உனக்க்காகதானே......
நீயழகுமோகனமாகவும் இருக்கிறாய் முராரியாகவும் இருக்கிறாய் மோகமாகவும் இருக்கிறாய் முள்ளாகவும் இருக்கிறாய்...புரிதல்களுக்கு அப்பாற்பட்ட பெண் நீயடி ...உனை புரிந்தவர்க்கு மட்டுமே நீயழகு !!!!
காத்திருப்புஎனக்கு தோன்றுமெனின் அடுத்த கணமே எடுத்து கொள்வேன் உனை .......விடுத்து காத்திருக்கிறேன் ...நால்வரின் பகை தீர்த்து நீ வரும் வரை .
வேட்கை என்னிடமிருந்து வருபவை வெறும் வார்த்தைகள் அல்ல உனை கரை ஏற்றி விடமாட்டேனா என்ற வேட்கை ....வேட்கைக்கு வெள்வியாக்குகிறேன்என் வாழ்க்கையை...நிச்சயம் உன் லட்சியம் .
தேடல்உன் முகம் பார்க்க விழைகிறேன் நிழற்படம் எடுத்து பார்க்கிறேன்உன் மாய கண்களும் மந்திர புன்னகையும் ஏதோ செய்யுதடி எனை ...எனது மார்பினருகே வைத்திருக்கிறேன் உன் முகத்தை எப்போதும்.!!!
ஒய்வு திக்கின்றி பயணித்து கொண்டிருக்கிறேன்,பின் தொடர்கிறாய் என்னை நினைவுகளில் ...மனப்புழுக்கம் தாங்க இயலாமல் உன் நினைவுகளின் நிழலில் சற்று இளைபாறுகிறேன்....
நம்பிக்கைநிறைவடையாது என் நிமிடங்கள் நீயின்றி,கடுமையான வார்த்தைகளை நீ பிரயோகிப்பினும் கவலை கொள்ளாமல் இருக்கிறேன்...உன் மீதுள்ள நம்பிக்கையால்.
நிழல்
இரவுகளில் இமை ஆகின்றாய்
பகல்களில் விழி ஆகின்றாய்
காலையில் தயங்குகிறாய்
மாலையில் மயங்குகிறாய்
முன்னே செல்லத்தான்
நினைக்கிறன்..
ஆனால் நிழலாய்
பின் தொடர்கிறேன் உனை!!!
தவிப்பு
இன்னும் மீளவே இல்லை
உனது கண்களில்
நிலைத்த என் பார்வை ..
இன்னும் மாறவே இல்லை
எனது தோள்களில்
நீ சாய்ந்திருந்த
நிமிடங்கள் ...
தவித்து கொண்டிருக்கிறேன்
உனை விடுதியில்
விட்டு வந்து !!!
வரம்
உன்னை காதலிக்கிறேன் என்று
வரமளித்து
உடனே உன்னை பிரியும்
சாபம் அளித்து விட்டாயே ...
தவமாக காத்திருக்கிறேன்
உன் முகம் காணும்
வரம் பெற !!!
பாரம்
உன் நினைவு அழுத்தும்போது
எல்லாம்
மார்போடு அழுந்த
அணைத்தபடி
குறுகி படுத்து கொள்கிறேன்,
நீ உடுத்தி போட்டு சென்ற
உன் வாசம் நிறைந்திருக்கும்
உன் இரவு உடுப்பை!!!
உயிர்
உன் விழி ஆகிறேன்
நீ பார்க்கும் போது...
உன் இமையாகிறேன்
நீ உறங்கும் போது ...
உன் கண்நீராகிறேன்
நீ துயருறும் போது ...
உன் சிரிப்பாகிறேன்
நீ மகிழ்வுறும் போது ...
உன்னுயிராகிறேன்
நீ என்னுயிராகும்போது !!!
உடை
என் குட்டி தேவதைக்கான உடைகளை
என் உயிர் நூல் கொண்டு நெய்ய
ஆரம்பித்திருக்கிறேன்,
காத்திருக்கிறேன் ..
சிறகு விரித்து
என்னுடை அணிந்து
அவள் எட்ட போகும் உயரங்களுக்காக.
துடிப்பு என் இதயம் துடித்து
கொண்டிருக்கிறது
உன் வருகைக்காக...
என் நாட்களை உனக்களித்து
உன் ஆயுள் நீள
வேண்டுகிறேன்,
நீ இழந்த அனைத்தையும்
மீண்டும் பெற!!
நினைவு பரிசுநீ விட்டு செல்லும்
நினைவுகளுக்கு
என் பரிசென்ன தெரியுமா.. !?
என் வாழ்க்கை..
நீ விரும்பினும் விரும்பாவிடினும்
உன் நிழல் நான்..
ஒளியில் உன் பின்தொடர்ந்து
இருளில் உன்னுள்ளே உறைவேன் .
கனா என் பின்னிரவிலும்
விழி மூட இயலாமல்
உறங்க முயற்சிக்கின்றேன்..
முயற்சி முற்று பெற்றது
முன்காலை
உன் முகம் தோய்ந்த கனவோடு..!!
முரண் தேம்பி அழும் என் காதல்
தேற்றுவாரின்றி
தேடி கொண்டிருந்தது
தேறுதல் வார்த்தைகளை ...
அவளிடம் ..!!
விஷம்
வார்த்தைகளின் விஷத்தை
உணர்ந்ததுண்டா ..!
அவள் வார்த்தைகளை நோக்குகையில்
தெரியும் , கொடும் தேளின்
கடும் விஷம் ஊடே செல்வது ....
காதல்
காதலா... ! என்று வினவ
முயற்சிக்கும் கணமே
ரத்தமும் சதையுமான ஓர்
வெளியை காட்டி விடுகிறாய்
பிறகெங்கே வினவ !.
காதல்
ஆயுதமேந்தி நின்ற
உன் நட்பிடம்
நிராயுதபாணியாய் நிற்கின்றது
என் காதல்
கொலைகளத்தில் களிரிடரும்
நிரபராதியைபோல் ....!
தவிப்பு உன் விழி இரண்டையும்
சந்தித்தபோது
உணர்விழந்தது
உடலும் மனமும் மட்டுமல்ல
என் உயிரும் கூடத்தான்...
மீட்டுக்க முடியாத
நினைவுகளையும் உணர்வுகளையும்
மீட்டு மீட்டி சென்றது
உன் அந்த பார்வைதான்
பாவையின் பார்வைக்கு
விலங்கிட முயற்சித்தேன்
என் விலங்கில் நானே மாட்டிக்கொண்டேன்.