Thursday, March 31, 2011

காலம்

உன்னுடன்
கைகோர்த்து
நடந்த நினைவுகள்
இலையுதிர்காலங்களில்...

உன் வெப்பசுவாசமும்

ஆதரவான அணைப்பும்

பனியுதிர்காலங்களில்...


உன் கடுங்கோபமும்

கண்ணீர் தாரைகளும்

மழையுதிர்காலங்களில்...


பருவங்கள் மாறுகின்றன

நினைவுகள்
மாற மாறுகின்றன..

நினைவுதிர் காலம்
தேடுகின்றேன்,
உயிருதிரும்
போதுதான்
என புரிகிறேன்
இப்போது !!!!

Monday, March 28, 2011

காதலிக்கிறேன்

ஆரவாரித்து செல்லும்
பெரும் கூட்டத்தினோடு
சென்றுகொண்டிருக்கிறேன்
தன்னந்தனியாக,
நீயில்லாத பொழுதுகளில்...

தனிமையும் ஆர்ப்பரித்து
பெரும்கூட்டமாகிறது
உன்னுடன் செல்கையில்...

உன்னை காதலிக்கிறேன்
உயிராய் காதலிக்கிறேன்
உன் நினைவுகளை பற்றி
காதலிக்கிறேன்,
உன் காதலை பற்றி
காதலிக்கிறேன்,

எப்போதும் உனை
பற்றி இருக்கவே
இன்னும் இறுக்கமாய்
உன்னை காதலிக்கிறேன்.!!!
உயிர் துளி

எனக்கான
மிகச்சிறந்த
நிமிடங்களை
வாழ்ந்து விட்டேன்
உன்னுடன்...

எனக்கான
தேவ நொடிகளை
பெற்று கொண்டேன்
உன்னிடம்...

என்னுயிர் துளியாக
பெற்று கொண்டேன்
எச்சிலுடன்
முத்தங்களையும்
உன்னிடம்.....

எவ்வளவோ
உன்னிடம் பெற்றும்,
திருப்பி உனக்களிக்க
ஏதுமில்லை என்னிடம்
என் காதலை தவிர.!!!


கூடி

காத்திருப்பது
மட்டும்
காதல் அல்லவே..
இருந்து காப்பதும்
கூடத்தான்...

கூடவே
கூடி இருந்தேன்..
உனை கூடவே
தேடி அலைந்தேன்..

கூடலே முடிவெனினும்,
கூடவே
துவங்கி இருக்கிறேன்..
உனை கூடி,
உனை சூடி,
உனை பாடி,
என்னிரு கரங்களிலும்
புன்னகைஏந்திய
உன் பொன்முகம்
தாங்கி..


இருளுடன் கழித்த
என் பகல்களை,
உன் விழிக்கீற்றினில்
திறக்க காத்திருக்கிறேன்.!!!


தேவதையின் காதலில்..

என் மார்பில் நீ
சாய்ந்திருந்த
நிமிடங்கள் அனைத்திலும்
என்
தேவதையாகவே
என்னோடு
இருந்திருக்கிறாய் ...

உன் மடியில் நான்
சாய்ந்திருந்த
கணங்கள் அனைத்திலும்
என்
தேவதையாகவே
என்னை
அணைத்திருக்கிறாய்...

நான் உன்
நியாபக மறதி
அல்ல ...
உன் நியாபக
தீ......

எரிந்தும் எரியாமல்
இருக்கிறேன்
உன் காதலில்...

நீ என்னை
எறிந்தும்,
எரியாமல்
இருக்கிறேன் உன் காதலில்.!!!!

Friday, March 25, 2011

புதிர்

உன்னோடு கழியும்
என் மிச்சமிருக்கும்
ஒவ்வொரு நிமிடங்களும் ...

இந்த கடலின் அலைகளை
போலவே
உன் புன்னகையிலும்
கண்ணசைவிலும்
எனை சிறை
வைத்திருக்கிறாய்...

மீள முடியாத
கண்ணீரோடு
காத்திருக்கிறேனடி ...

எனை நீ மீட்டு
செல்லும் கணத்திற்காக .!!!
என் நீ ...

உறக்கத்திலும்
விழித்திருக்கிறேன்
உன் ஸ்பரிசம்களோடு....

எப்போதும் என் மீது
உன் வாசனை...

என்னுள் உறங்கும்
உன்னை எழுப்ப
மனமின்றி..
விழித்திருக்கிறேன்
உன்னை அணைத்தபடி!!!

விழிப்பு

இந்த அதிகாலை
உறைந்து
போயிருக்கிறது
குளிரோடு மட்டுமல்ல ..
உன் வெதுப்பான
அணைப்போடும்...

உனை அங்கே உறங்கவிட்டு
தனியே
விழித்திருக்கிறேன்
உன் அழைப்பிற்காக..!!!

இரவுகள்

தனிமை கொல்லும்
இந்த இரவுகளில் உன்
நினைவுகளோடு
அலைந்து கொண்டிருக்கிறேன்
என் செவிகளில்
உன் குரலை அணைத்தபடி!!!!
வா...

அகன்று விரிந்து பரந்த
உன் கண்களில் தெரிகின்றதடி
உன் அவா..

தடுப்பதெது???

தடைகளை உடைத்து வா...
சாதிக்க பிறந்தவள் நீ...
திமிறி எழுந்து வா...

திரைகளை விலக்கி வா...
பீடு நடை போட்டு வா...
எனை வெல்ல யாருமில்லை
என்ற திமிரோடு வா..

அகந்தையோடு வா...

ஆரவாரித்து வா...

இளைப்பாறாமல் இறுமாப்புடன் வா...

ஈன்றுவந்து வா...

உனைவெல்ல யாருமில்லையென வா...

ஊழி பெருவெள்ளமென வா...

எழுச்சியோடு வா...

ஏறுநடை போட்டு வா...

ஐயமின்றி அச்சமின்றி வா...

ஒற்றை தழலுடன் வா...

ஓங்கி எறிய விட்டு வா...

ஒளடதம் பற்றி வா....!!!


இந்த உலகை வென்றுவிட
வா...
உன் காலடியில் இட்டு
மிதித்து விட வா...!!!
வந்து விடு வா...!!!


சிறகடித்து ..

இடைவெளி இல்லாமல்
வந்து விழும் உன்
வார்த்தைகளும் வாக்கியங்களும்
எப்போதும் சலிப்பதேயில்லை
எனக்கு..

நொடிகள் நிமிடங்களாகும்
ஆனால் மணிகள்
நொடிகளாகின்றன
உன்னுடன் கதைத்திருக்கும்போது ...

உன்னுடன் கதைத்தபோது
எஞ்சிய
உன் வார்த்தைகள்
தேவதைகள் ஆகின்றன
நீயில்லாத பொழுதுகளில்...

சின்ன சின்ன சண்டைகள்,
செல்ல கடிகள்,
மூர்க்க முத்தங்கள் ..
வியர்க்கும் பொழுதும்
கை அலம்பிய பிறகும்
துடைத்து விடும் ஆதுரமான
உன் கையுடன் சேர்ந்த
துப்பட்டா...

இப்படி நீயில்லா
தருணங்களிலும்
எனை நிறைத்தபடி நீ...

உன்
முறிந்த சிறகாகவேனும்
எனக்கு அனுமதி கொடு..
உனை பற்றி
நீ பறந்து செல்ல..

அடைய இருக்கும்
சிகரங்களை விட்டு
அலைந்த
நெடும்தரையை சுற்றியே
வருகிறாய்..
சிறிதேனும் பறக்க
முயற்சி செய் உன்
வேலிகளை விலக்கி
நீ அடையபோகும் உயரங்களுக்காக.!!!

என் குட்டி தேவதை பெண்ணே ...

உன்னை பற்றிய நினைவுகளை
மட்டும்
என்னுள் விதைத்து விட்டு
சென்று விட்டாய்..
ஆனால் எனக்கு தெரியாமலே
அவை
விருட்சமாகி விழுதுகள்
விட்டிருக்கின்றது..

எனக்கு மட்டுமே
சொந்தம் என்று உரிமையோ
சொந்தமோ கொண்டாடும் அளவிற்கு
என்னிடம் இதுவரை எதுவுமில்லை
என்றே நினைத்திருந்தேன் ..

ஆனால் இப்போது
ஒன்றிருக்கிறது
என்று உணர்கிறேன் ..

நீ எனக்கு மட்டுமே
சொந்தமானவள் ..
உரிமையானவள்...

காத்து கிடப்பது
உனக்காக மட்டும் என்பதை
மறந்து விடாதே..

நான் தவம் செய
போகின்றேன்..
காத்திருத்தல் எனும் தவம் ..

எதை கொடுக்க போகிறாயடி !!
வரமா !!?
சாபமா !!?
எதை தருபினும் ஏற்று கொள்வேன் ..
வரமெனின்
வாழ்வோம் இணைபிரியாது..
இல்லையெனின்
வாழ்வேன்
உன் நினைவுகளுடன் பிரியாது .!!

காத்திருக்கிறேன்

என் வானவில் நீ ..
கலவையான
உன் உணர்வுகளை
என்னிடமே கொட்டுவதால்
என் வானவில் நீ...

என் தேவதை நீ ..
எனக்கான உணர்வுகளை
ஆட்கொண்டு
ஆரவாரிக்கும்
என் தேவதை நீ...

என் அலைகடல் நீ..
பொங்கி எழுந்து
ஆர்ப்பரிக்கும்
உன் வார்த்தை அலைகளில்
என்னை மூழ்கடிக்கும்
என் ஆழ அலைகடல் நீ...

காதலித்து காத்திருக்கிறேன்
உன் வண்ணங்களுக்காக
அது கருமைஎனினும்
அதில் கரைந்து விட..

காதலித்து காத்திருக்கிறேன்
உன் வரங்களுக்காக ..
காத்திருப்பே வரம் எனினும்
என் தேவதைக்கான
இன்னுமோர் தவம் செய ...

காதலித்து காத்திருக்கிறேன்
உன் வார்த்தை பேரலைகளில்
நான் மூழ்கி விட...

காத்திருக்கிறேனடி
உனை காதலித்து !!!!